கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் வேளச்சேரியில் உள்ள மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மாவட்ட வனச்சரக அலுவலர்கள் இது போன்று சுமார் பன்னிரண்டு புகார்கள் வந்துள்ளதாகவும் குரங்குகளை பிடிக்க சில நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்திற்கும் சேர்த்து சிரிய அளவிலான ஊழியர்களே பணியில் இருப்பதால் இது போன்று கால அளவு தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் உங்கள் பகுதிகளில் இது போன்று குரங்கு மற்றும் பாம்பு தொல்லைகள் இருப்பின் இவர்களை தொடர்பு கொள்ள அலுவலக தொலைபேசி எண்: 22200335 /கைபேசி எண் : 9566184292
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…