Categories: சமூகம்

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றனர். காலனி பகுதிகளிலும் அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டோருக்கே பெரும்பாலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளனர். ஆனால் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக சீனிவாசபுரத்தில் கடந்த ஆறு மாதங்களில் இங்கு வசித்து வரும் மக்களில் சுமார் ஐம்பது நபர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

மேலும் தடுப்பூசி போடுவதில் இங்கு வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கி தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். இது பற்றி மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கேட்ட போது இது ஒரு சவாலான காரியம் என்று கூறினார். இந்த பகுதிகளில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் இங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சியினர் யாரும் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் காய்கறி வண்டிகள் வரும் போது மக்கள் நெருக்கமாக சென்று காய்கறி வாங்குகின்றனர். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கோவிட் கேர் பணியாளர்கள் மக்களிடம் அறிவுறுத்தினால் இங்குள்ள அரசியல் கட்சியினர் இந்த வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசும், அரசியல் கட்சியினரும் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.

admin

Recent Posts

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

1 day ago

லஸ் சர்க்கிள் வியாபாரிகள் எம் கே அம்மன் எம்ஆர்டிஎஸ் நிலையம் அருகே கடைகளை திறந்துள்ளனர்.

லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…

1 day ago

எம்.ஆர்.சி அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்க இயக்குநரகம் சீல் வைத்துள்ளது. ‘டாஸ்மாக் ஊழல்’ குறித்து விசாரணை

மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…

2 days ago

ஆர்.கே. மட சாலையில் ‘Green’ illuminated nook. பொது இடங்களை பிரகாசமாக்கும் ஜி.சி.சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…

3 days ago

கபாலீஸ்வரர் கோவிலில் பக்தி பாடல் வீடியோக்கள் வெளியீடு: மே 18 மாலை

கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…

6 days ago

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பி.எஸ். சீனியர் பள்ளி மாணவர்கள்

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…

1 week ago