தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றனர். காலனி பகுதிகளிலும் அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டோருக்கே பெரும்பாலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளனர். ஆனால் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக சீனிவாசபுரத்தில் கடந்த ஆறு மாதங்களில் இங்கு வசித்து வரும் மக்களில் சுமார் ஐம்பது நபர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
மேலும் தடுப்பூசி போடுவதில் இங்கு வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கி தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். இது பற்றி மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கேட்ட போது இது ஒரு சவாலான காரியம் என்று கூறினார். இந்த பகுதிகளில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் இங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சியினர் யாரும் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் காய்கறி வண்டிகள் வரும் போது மக்கள் நெருக்கமாக சென்று காய்கறி வாங்குகின்றனர். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கோவிட் கேர் பணியாளர்கள் மக்களிடம் அறிவுறுத்தினால் இங்குள்ள அரசியல் கட்சியினர் இந்த வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசும், அரசியல் கட்சியினரும் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…