Categories: சமூகம்

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றனர். காலனி பகுதிகளிலும் அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டோருக்கே பெரும்பாலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளனர். ஆனால் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக சீனிவாசபுரத்தில் கடந்த ஆறு மாதங்களில் இங்கு வசித்து வரும் மக்களில் சுமார் ஐம்பது நபர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

மேலும் தடுப்பூசி போடுவதில் இங்கு வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கி தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். இது பற்றி மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கேட்ட போது இது ஒரு சவாலான காரியம் என்று கூறினார். இந்த பகுதிகளில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் இங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சியினர் யாரும் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் காய்கறி வண்டிகள் வரும் போது மக்கள் நெருக்கமாக சென்று காய்கறி வாங்குகின்றனர். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கோவிட் கேர் பணியாளர்கள் மக்களிடம் அறிவுறுத்தினால் இங்குள்ள அரசியல் கட்சியினர் இந்த வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசும், அரசியல் கட்சியினரும் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

4 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago