பள்ளிகள், கல்லூரிகளில் மேலும் சில வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலும் சில வகுப்புகள் அரசின் ஆணைக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 9 மற்றும் 11 வகுப்பு தொடங்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகை பதிவு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் வர இருப்பதால் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு வந்தால் நல்லது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம் இல்லாமல் வந்த மாணவிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

இராணி மேரி கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவிகளை வரிசையில் நிற்க செய்து முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.

admin

Recent Posts

பங்குனி திருவிழா 2026: கிராம தேவதைக்கு பூஜை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…

3 days ago

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

5 days ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

6 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

7 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

1 week ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

1 week ago