இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலும் சில வகுப்புகள் அரசின் ஆணைக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 9 மற்றும் 11 வகுப்பு தொடங்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகை பதிவு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் வர இருப்பதால் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு வந்தால் நல்லது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம் இல்லாமல் வந்த மாணவிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இராணி மேரி கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவிகளை வரிசையில் நிற்க செய்து முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…