சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து தூரத்தில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். (ஏனென்றால் இந்த பகுதிகளில் தற்போது வசிக்கும் வரும் மக்கள் ஏற்கனெவே பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுக்கு அரசு நிரந்தர குடியிருப்புகள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தி கொடுத்தனர். எனவே அவர்கள் வீட்டில் இந்த பகுதியில் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் அதே பள்ளிகளில் மீண்டும் படிப்பை தொடர்கின்றனர்).
எடுத்துக்காட்டாக மாதா சர்ச் சாலையிலுள்ள செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் லாசரஸ் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தினமும் ஸ்பெஷலாக மூன்று பேருந்து சேவைகளை இயக்குகின்றனர். இந்த பேருந்துகள் மூலம் கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேராக பள்ளி வாசலில் வந்து இறக்கி விடுகின்றனர். வேறெங்கும் இந்த பேருந்து இடையில் நிற்காது.
இது சம்பந்தமாக லாசரஸ் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது மாணவர்கள் நலன் கருதி தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவரவும் மற்றும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லவும் ஆசிரியர் ஒருவர் இந்த பேருந்தில் சென்று வருவதாக கூறுகிறார்.
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…