சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து தூரத்தில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். (ஏனென்றால் இந்த பகுதிகளில் தற்போது வசிக்கும் வரும் மக்கள் ஏற்கனெவே பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுக்கு அரசு நிரந்தர குடியிருப்புகள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தி கொடுத்தனர். எனவே அவர்கள் வீட்டில் இந்த பகுதியில் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் அதே பள்ளிகளில் மீண்டும் படிப்பை தொடர்கின்றனர்).
எடுத்துக்காட்டாக மாதா சர்ச் சாலையிலுள்ள செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் லாசரஸ் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தினமும் ஸ்பெஷலாக மூன்று பேருந்து சேவைகளை இயக்குகின்றனர். இந்த பேருந்துகள் மூலம் கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேராக பள்ளி வாசலில் வந்து இறக்கி விடுகின்றனர். வேறெங்கும் இந்த பேருந்து இடையில் நிற்காது.
இது சம்பந்தமாக லாசரஸ் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது மாணவர்கள் நலன் கருதி தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவரவும் மற்றும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லவும் ஆசிரியர் ஒருவர் இந்த பேருந்தில் சென்று வருவதாக கூறுகிறார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…