ஊரடங்கிற்கு பிறகு கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் சபா அரங்குகளில் வழக்கம் போல் நடைபெற தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கச்சேரிகள் மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி பாரதிய வித்யா பவனில் தியாகராஜா ஆராதனை விழாவை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. இது பாரதிய வித்யா பவனின் முதல் லைவ் கச்சேரி ஆகும். ரசிகர்களும் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு பிறகு ராக சுதா அரங்கில் மூத்த கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் விஜய் சிவாவின் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரிக்கு நிறைய இசை ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் வந்தவர்களிடம் அவர்களுடைய முகவரிகள் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர்ந்து கச்சேரிகளை கண்டு ரசித்தனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சாபாவின் இந்த மாத கச்சேரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கச்சேரிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்பவர்கள் முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது நடைபெறும் கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

3 weeks ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

3 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 month ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 month ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

1 month ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago