ஊரடங்கிற்கு பிறகு கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் சபா அரங்குகளில் வழக்கம் போல் நடைபெற தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கச்சேரிகள் மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி பாரதிய வித்யா பவனில் தியாகராஜா ஆராதனை விழாவை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. இது பாரதிய வித்யா பவனின் முதல் லைவ் கச்சேரி ஆகும். ரசிகர்களும் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு பிறகு ராக சுதா அரங்கில் மூத்த கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் விஜய் சிவாவின் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரிக்கு நிறைய இசை ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் வந்தவர்களிடம் அவர்களுடைய முகவரிகள் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர்ந்து கச்சேரிகளை கண்டு ரசித்தனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சாபாவின் இந்த மாத கச்சேரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கச்சேரிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்பவர்கள் முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது நடைபெறும் கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

3 days ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

3 days ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

5 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

6 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

6 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

6 days ago