இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடட்டம்.

இன்று ஜூன் 29 காலை இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுவதால் மசூதிகள் உள்ள பகுதிகள் பரபரப்பாக இருந்தது.

மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் அமைந்துள்ள மசூதிகளிலும், ஆர் ஏ புரத்தில் உள்ள காமராஜர் சாலையிலும், கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியிலும், சாந்தோமில் உள்ள மசூதியிலும் காலை தொழுகை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் பண்டிகையை கொண்டாட சிறப்பாக உடையணிந்து வந்திருந்தனர்.

இந்த புகைப்படம் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் எடுக்கப்பட்டது, இங்கு சென்னை மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஒரு ரயில் நிலையம் அமையவுள்ளது.

Verified by ExactMetrics