மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானம். இந்த மைதானம் ஒரு வழக்கின் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.
சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார் அப்போது எம்.எல்.ஏ வேலுவுடன் இந்த மைதானத்தையும் பார்வையிட்டுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசியதாகவும் அவர்கள் பள்ளி வேலைநாட்கள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் எம்.எல்.ஏ தா.வேலு தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் சில வேலைகள் செய்து முன்பிருந்தது போன்று பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த பிரச்சனை பற்றி அடுத்த வாரம் பி.எஸ்.பள்ளி நிர்வாகத்தினரிடம் திரும்ப பேசவுள்ளதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…