மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானம். இந்த மைதானம் ஒரு வழக்கின் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.
சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார் அப்போது எம்.எல்.ஏ வேலுவுடன் இந்த மைதானத்தையும் பார்வையிட்டுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசியதாகவும் அவர்கள் பள்ளி வேலைநாட்கள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் எம்.எல்.ஏ தா.வேலு தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் சில வேலைகள் செய்து முன்பிருந்தது போன்று பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த பிரச்சனை பற்றி அடுத்த வாரம் பி.எஸ்.பள்ளி நிர்வாகத்தினரிடம் திரும்ப பேசவுள்ளதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…