மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானம். இந்த மைதானம் ஒரு வழக்கின் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.
சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார் அப்போது எம்.எல்.ஏ வேலுவுடன் இந்த மைதானத்தையும் பார்வையிட்டுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசியதாகவும் அவர்கள் பள்ளி வேலைநாட்கள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் எம்.எல்.ஏ தா.வேலு தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் சில வேலைகள் செய்து முன்பிருந்தது போன்று பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த பிரச்சனை பற்றி அடுத்த வாரம் பி.எஸ்.பள்ளி நிர்வாகத்தினரிடம் திரும்ப பேசவுள்ளதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…