மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் அலுவலகம் இந்த வாரம் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அருகே திறக்கப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் கலந்து கொண்டனர். இந்த புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தில் இன்னும் கொஞ்ச வேலைகள் இருப்பதாகவும் மேலும் அந்த வேலைகள் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் முழுஅளவில் செயல்பட தொடங்கும் என்று எம்.எல்.ஏ தா. வேலு கூறுகிறார். இதே இடத்தில்தான் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் அலுவலகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…