மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் அலுவலகம் இந்த வாரம் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அருகே திறக்கப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் கலந்து கொண்டனர். இந்த புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தில் இன்னும் கொஞ்ச வேலைகள் இருப்பதாகவும் மேலும் அந்த வேலைகள் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் முழுஅளவில் செயல்பட தொடங்கும் என்று எம்.எல்.ஏ தா. வேலு கூறுகிறார். இதே இடத்தில்தான் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் அலுவலகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…