மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் அலுவலகம் இந்த வாரம் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அருகே திறக்கப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் கலந்து கொண்டனர். இந்த புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தில் இன்னும் கொஞ்ச வேலைகள் இருப்பதாகவும் மேலும் அந்த வேலைகள் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் முழுஅளவில் செயல்பட தொடங்கும் என்று எம்.எல்.ஏ தா. வேலு கூறுகிறார். இதே இடத்தில்தான் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் அலுவலகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…