மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை ஆர்.ஏ.புரம் பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் வாங்க நிதியுதவி

ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 அன்று பள்ளி திறக்கப்பட்டவுடன் புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளையின் நன்கொடையின் மூலம் இது ஓரளவு சாத்தியமானது. இந்த நன்கொடை புதிய கல்வியாண்டு தொடங்கும் போது வழங்கப்படும் வருடாந்திர நன்கொடையாகும், ஆனால் இந்த ஆண்டு கொரோனா சூழ்நிலையின் காரணமாக சீருடை தைத்து மாணவர்களுக்கு வழங்குவது தாமதமானது.

இந்த பள்ளியில் படிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி மயிலாப்பூர் டைம்ஸிடமிருந்தும் மற்றும் மயிலாப்பூர்வாசிகளிடமிருந்தும் பெறப்படுகின்றது. இந்தப் பள்ளிக்கு உதவிகள் செய்வது தவிர்த்து, இதர மயிலாப்பூர் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் 20 ஏழை மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்வி படிப்புக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டிற்கான உதவித்தொகை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்/செப்டம்பரில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால் ஆன்லைன் வழியாக அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு. மேலும் விவரங்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாந்தியை 044 -24982244 தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago