மயிலாப்பூர் மண்டலத்திற்கு மீண்டும் புதிய போலீஸ் டி.சி.

மயிலாப்பூர் மண்டலத்துக்கு புதிய போலீஸ் துணை கமிஷனராக புதிய போலீஸ் அதிகாரி ஒருவரை நியமித்து ஒரு வாரமே ஆகாத நிலையில், அவரை இடமாற்றம் செய்து இளம் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.

ரஜத் சதுர்வேதி புதிய டிசிபி.

காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த அவர், தற்போது சூப்பிரண்டாகப் பதவி உயர்வு பெற்று மயிலாப்பூர் டிசிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திஷா மிட்டலிடம் இருந்து புதிய டிசிபியாக ரோஹித் என்.ராஜகோபால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Verified by ExactMetrics