மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தை ஏற்கனெவே முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் பயன்படுத்தி வந்தார். இந்த இடம் தொகுதியின் மைய பகுதியில் இருப்பதாலும் முன்னாள் எம்.எல்.ஏ பயன்படுத்தி வந்ததாலும் பொதுமக்களுக்கு பரீட்சயமாக இருப்பதால் இதே இடத்தில் அலுவலகத்தை தொடங்க இருப்பதாக வேலு தெரிவித்தார். இந்த இடத்தின் அருகே மாநகராட்சி அலுவலகங்களும், மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடமும் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…