தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத உள்ளூர் கட்சி தொண்டர்கள் ரிசர்வ் செய்து வருகின்றனர். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் தற்போதுள்ள சட்ட மன்ற உறுப்பினர் திரு. நடராஜ் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்று தெரியாத நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த பணிகளை பட்டியலிட்டு வருகிறார். இதுபோல் மேலும் சில அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கவுள்ளதாக தெரிகிறது.

பா.ஜ.க கட்சியின் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் சிலர் விரும்புவதாக தெரிகிறது. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில், பெசன்ட் நகரில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அமெரிக்கா நாராயணனும் மற்றும் தி.மு.க-வை சேர்ந்த வேலுவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சில பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கா நாராயணன் ஏற்கனவே பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இதுவரை மயிலாப்பூர் தொகுதியில் எந்தவொரு கட்சியும் அதிகார பூர்வமாக தங்களுடைய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago