தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத உள்ளூர் கட்சி தொண்டர்கள் ரிசர்வ் செய்து வருகின்றனர். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் தற்போதுள்ள சட்ட மன்ற உறுப்பினர் திரு. நடராஜ் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்று தெரியாத நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த பணிகளை பட்டியலிட்டு வருகிறார். இதுபோல் மேலும் சில அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கவுள்ளதாக தெரிகிறது.
பா.ஜ.க கட்சியின் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் சிலர் விரும்புவதாக தெரிகிறது. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில், பெசன்ட் நகரில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அமெரிக்கா நாராயணனும் மற்றும் தி.மு.க-வை சேர்ந்த வேலுவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சில பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கா நாராயணன் ஏற்கனவே பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இதுவரை மயிலாப்பூர் தொகுதியில் எந்தவொரு கட்சியும் அதிகார பூர்வமாக தங்களுடைய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…