தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத உள்ளூர் கட்சி தொண்டர்கள் ரிசர்வ் செய்து வருகின்றனர். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் தற்போதுள்ள சட்ட மன்ற உறுப்பினர் திரு. நடராஜ் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்று தெரியாத நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த பணிகளை பட்டியலிட்டு வருகிறார். இதுபோல் மேலும் சில அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கவுள்ளதாக தெரிகிறது.

பா.ஜ.க கட்சியின் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் சிலர் விரும்புவதாக தெரிகிறது. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில், பெசன்ட் நகரில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அமெரிக்கா நாராயணனும் மற்றும் தி.மு.க-வை சேர்ந்த வேலுவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சில பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கா நாராயணன் ஏற்கனவே பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இதுவரை மயிலாப்பூர் தொகுதியில் எந்தவொரு கட்சியும் அதிகார பூர்வமாக தங்களுடைய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

4 days ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

4 days ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

3 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

4 weeks ago