என்சிசியின் ராணுவ பிரிவு லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் தொடங்கப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கேடட் கார்ப்ஸ் – ராணுவப் பிரிவு நவம்பர் 16 அன்று பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

என்.சி.சி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறப்பு விருந்தினராக சப். சுரேஷ் குமார் – JCO, 1(TN) CTC NCC அவர்கள் கலந்து கொண்டார்.

பள்ளியில் குழுவினரால் பிரார்த்தனை பாடல் மற்றும் என்சிசி கொடி பாடல் பாடப்பட்டது. பள்ளி மாணவியர் கே.ஹரிணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில், மாணவர்களின் இளம் மனங்களில் தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம், வெற்றி மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வத்சலா நாராயணசாமி – செயலாளர் (NBGES) மற்றும் வி.எஸ். சுப்பிரமணியன் – செயலாளர் (சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளி ) ஆகியோரும் பேசினர்.

தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியரும் சுருக்கமாகப் பேசினார்.

மாணவி எம்.அக்ஷயா நன்றியுரையாற்றினார்.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 day ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

2 days ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

3 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

3 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

6 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago