ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை கார்ப்பரேஷனின் அல்போன்சோ விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நிறைய பேர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் விளையாடுவார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கு பேட்மிண்டன் விளையாட்டுக்காக ஒரு இண்டோர் மைதானம் கட்டப்பட்டது.
தற்போது இங்கு மற்றுமொரு டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் இரண்டு தமிழக அமைச்சர்களால் திறக்கப்படவுள்ளது. இது மாடர்ன் வசதிகளுடனும் அலங்கார விளக்குகளுடனும் மற்றும் ஒரு கேலரியுடனும் அமைந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் மாநில அரசிடமிருந்து நிதி பெற்று இந்த புதிய டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் கட்டுவதற்கு உதவிபுரிந்துள்ளார்.
அடையாறில் வசிக்கும் முன்னாள் இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ராஜேஷ் முன்னின்று, சட்டமன்ற உறுப்பினர் மூலமாக இந்த இண்டோர் மைதானம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் திறந்த பிறகு இதில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் இதர கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்படும்.
மைதானம் திறந்த பிறகு பொதுமக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…