ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை கார்ப்பரேஷனின் அல்போன்சோ விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நிறைய பேர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் விளையாடுவார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கு பேட்மிண்டன் விளையாட்டுக்காக ஒரு இண்டோர் மைதானம் கட்டப்பட்டது.

தற்போது இங்கு மற்றுமொரு டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் இரண்டு தமிழக அமைச்சர்களால் திறக்கப்படவுள்ளது. இது மாடர்ன் வசதிகளுடனும் அலங்கார விளக்குகளுடனும் மற்றும் ஒரு கேலரியுடனும் அமைந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் மாநில அரசிடமிருந்து நிதி பெற்று இந்த புதிய டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் கட்டுவதற்கு உதவிபுரிந்துள்ளார்.

அடையாறில் வசிக்கும் முன்னாள் இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ராஜேஷ் முன்னின்று, சட்டமன்ற உறுப்பினர் மூலமாக இந்த இண்டோர் மைதானம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம் திறந்த பிறகு இதில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் இதர கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்படும்.

மைதானம் திறந்த பிறகு பொதுமக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 weeks ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

3 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

3 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

1 month ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

1 month ago