சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட வரும் மக்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் வகையில் சில பிரச்சனைகள் இருந்தது. இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்பட்டது. தற்போது இங்கு இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்களையும் அவர்களுக்கு செலுத்திய தடுப்பூசி பற்றிய விவரங்களையும் சேகரிக்கின்றனர். பின்னர் வேறொரு குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொலைபேசி பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இங்கு கூச்சல் குழப்பம் தவிர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் எளிமையாக உள்ளது.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…