மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண் கொண்டு வந்து குளத்தின் அடிப்பகுதியில் நிரப்பினர். இவ்வாறு செய்தால் மழை நீர் குளத்தில் தேங்கி நிற்கும் என்கிற நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இப்போது இந்த வாரம் பெய்த மழையினால் தற்போது சுமார் ஒரு அடி அளவுக்கு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்திற்கு அருகிலுள்ள தெருக்களில் குழாய் பதித்து அதிலிருந்து வரும் மழை நீரையும் குளத்தில் சேர்த்துள்ளனர். இதன் மூலமும் தண்ணீர் கூடுதலாக குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குளத்திற்கு வந்தால் மார்ச் மாதத்தில் சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்பம் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…