இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில் கச்சேரி சாலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கடை கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. வெஜிடபிள் ரைஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம், கேரட் சாதம், தேங்காய் சாதம், பொதினா சாதம் போன்ற சாத வகைகளை பார்சல் செய்து விற்கின்றனர். ஒரு பார்சல் விலை ரூ.40.
இந்த உணவகம் கடந்த வருடம் கூட நடைபெற்றதாகவும். ஆனால் தற்போது மதிய உணவு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் நூறு பொட்டலங்கள் விற்பதாகவும் இந்த கடையின் முதலாளி தெரிவிக்கிறார். இது தவிர இவர்கள் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் எடுத்து செய்து தருவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் இவர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 97109 34733
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…