இந்த ஊரடங்கு நேரத்தில் சிறிய அளவில் உணவகம் தொழில் செய்து வந்தவர்களின் வியாபாரம் ஓரளவு நல்ல முறையில் நடந்தது. அந்த வகையில் கச்சேரி சாலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கடை கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. வெஜிடபிள் ரைஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம், கேரட் சாதம், தேங்காய் சாதம், பொதினா சாதம் போன்ற சாத வகைகளை பார்சல் செய்து விற்கின்றனர். ஒரு பார்சல் விலை ரூ.40.
இந்த உணவகம் கடந்த வருடம் கூட நடைபெற்றதாகவும். ஆனால் தற்போது மதிய உணவு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் நூறு பொட்டலங்கள் விற்பதாகவும் இந்த கடையின் முதலாளி தெரிவிக்கிறார். இது தவிர இவர்கள் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் எடுத்து செய்து தருவதாகவும் தெரிவிக்கிறார். மேலும் இவர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 97109 34733
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…
மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் மார்ச் 25 மாலை, இணைந்து பிரச்சாரத்தை தொடங்கினர். தேசிய ஜனநாயக…
பரந்து விரிந்த, இளம் நீல நிற வானத்தின் கீழும்; மெல்லிய காற்று வீசியும், அதே சமயம் அரிதாகவும் இருந்த ஒரு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…