மயிலாப்பூரை சேர்ந்த பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எம். மகேந்தர் காலமானார்

மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் எம். மகேந்தர், பி.எஸ்.சி, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் (இ.என்.டி), டி.எல்.ஓ – மே 18 அன்று காலமானார். அவருக்கு வயது 69.

இவர் கடந்த ஆண்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மறைந்த எஸ். மாருதி ராவின் மகன். இவரது மகன் டாக்டர் எம். ஹரிஷ், நன்கு அறியப்பட்ட இன்டர்வென்ஷனல் நுரையீரல் நிபுணர்.

டாக்டர் மகேந்தர் ஒரு பிரபலமான ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இவர் மயிலாப்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராக பணியாற்றிவந்தவர். மேலும் மயிலாப்பூரில் வசித்துவரும் பெரும்பாலான மக்களுக்கு நன்கு தெரிந்தவர்.

இவர் ஒரு தீவிர புகைப்படக்காரராகவும் இருந்தார். மெட்ராஸின் ஃபோட்டோகிராபிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்துள்ளார். பல பழமையான நிகழ்ச்சிகளிலும் காட்சிகளிலும் பங்கேற்றவர். மேலும் மயிலாப்பூரின் வாழ்க்கை பற்றிய படங்களை கூட படமாக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.

அவருடைய இந்த புகைப்படங்களை அவரது கிளினிக்கிலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் காண்பித்தார். மேலும் அவருடைய குடும்பத்தை drmharish@gmail.com இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாராவது காலமானால், அவர்கள் பற்றிய விவரங்களை மயிலாப்பூர் டைம்ஸுக்கு  mytimesedit@gmail.com மின்னஞ்சல் செய்யவும்.

 

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

2 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

3 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

3 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

1 day ago