கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளை மூடும் பணி தொடக்கம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு இடங்கள் உள்ளது. இதுபோன்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதுபோன்ற கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களை அகற்றவும் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் குத்தகை எடுத்திருப்பவர்கள் அதற்கான வாடகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து செயல்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலை அருகே உள்ள இடத்தில் ஒருவர் நீண்ட மாதங்களாக வாடகை ஏதும் தராமல் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். நேற்று மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இது போன்று மற்ற இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு சீல் வைக்கும் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பிரச்சனை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாக வழக்குகள் ஏற்கனெவே தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர், தாங்கள் ஐம்பது வருடங்களாக கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகளை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதாகவும் கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர இல்லாததால் இந்த உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago