கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளை மூடும் பணி தொடக்கம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு இடங்கள் உள்ளது. இதுபோன்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதுபோன்ற கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களை அகற்றவும் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் குத்தகை எடுத்திருப்பவர்கள் அதற்கான வாடகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து செயல்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலை அருகே உள்ள இடத்தில் ஒருவர் நீண்ட மாதங்களாக வாடகை ஏதும் தராமல் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். நேற்று மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இது போன்று மற்ற இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு சீல் வைக்கும் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பிரச்சனை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாக வழக்குகள் ஏற்கனெவே தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர், தாங்கள் ஐம்பது வருடங்களாக கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகளை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதாகவும் கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர இல்லாததால் இந்த உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago