தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து தங்களுடைய பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சில இடங்களில் இனிப்புகள் மாணவர்களுக்கு வழஙங்கப்பட்டது. அரசு ஆணைக்கிணங்க மாணவர்களுக்கு சில விளையாட்டுகள் நடத்தப்பட்டது. சில இடங்களில் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
சாந்தோம் பேராலயம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் அனைவரையும் அவரவர் வகுப்பில் அமரவைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகளை நடத்தினர்.மேலும் விருப்பப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், பள்ளிக்கு வராதவர்கள் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…