தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து தங்களுடைய பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சில இடங்களில் இனிப்புகள் மாணவர்களுக்கு வழஙங்கப்பட்டது. அரசு ஆணைக்கிணங்க மாணவர்களுக்கு சில விளையாட்டுகள் நடத்தப்பட்டது. சில இடங்களில் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
சாந்தோம் பேராலயம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் அனைவரையும் அவரவர் வகுப்பில் அமரவைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகளை நடத்தினர்.மேலும் விருப்பப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், பள்ளிக்கு வராதவர்கள் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…