நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் பாழடைந்த குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

மயிலாப்பூர், நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் படிக்கட்டு வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்டனர்.

நாட்டன் தோட்டம் என்பது பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய (அதன் கிழக்குப் பகுதியில்) திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு காலனி ஆகும்.

1970களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட நான்கு பிளாக்குகளில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வந்ததாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர். காலனியை மீண்டும் புதுப்பிப்பதற்க்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடனான இறுதி ஒப்பந்தத்திற்க்கு பின்னர் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு வெளியேறினர்.

ஆனால் சுமார் 40 குடும்பங்கள் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து தங்கி ஆபத்தை எதிர்கொண்டனர். வியாழன் இரவு நடந்த சம்பவம் இது போன்ற முதல் சம்பவம் என்று கூறப்படுகிறது. இப்போது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வெளியே செல்ல வற்புறுத்துகிறார்கள்.

இங்கு வசிக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மார்ச் 30-ம் தேதி குடிசை மாற்று வாரியத்தின் ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று உள்ளூர் வளாக சமூக சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக, அவை கிடப்பில் போடப்பட்டன.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 weeks ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 weeks ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

4 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 month ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

1 month ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

1 month ago