நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் பாழடைந்த குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

மயிலாப்பூர், நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் படிக்கட்டு வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்டனர்.

நாட்டன் தோட்டம் என்பது பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய (அதன் கிழக்குப் பகுதியில்) திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு காலனி ஆகும்.

1970களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட நான்கு பிளாக்குகளில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வந்ததாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர். காலனியை மீண்டும் புதுப்பிப்பதற்க்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடனான இறுதி ஒப்பந்தத்திற்க்கு பின்னர் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு வெளியேறினர்.

ஆனால் சுமார் 40 குடும்பங்கள் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து தங்கி ஆபத்தை எதிர்கொண்டனர். வியாழன் இரவு நடந்த சம்பவம் இது போன்ற முதல் சம்பவம் என்று கூறப்படுகிறது. இப்போது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வெளியே செல்ல வற்புறுத்துகிறார்கள்.

இங்கு வசிக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மார்ச் 30-ம் தேதி குடிசை மாற்று வாரியத்தின் ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று உள்ளூர் வளாக சமூக சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக, அவை கிடப்பில் போடப்பட்டன.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

6 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago