வைஜெயந்திமாலா பாலி, சேஷம்பட்டி சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள்

வைஜெயந்திமாலா பாலி

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகளுக்கு மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பாரம்பரிய நடனக் கலைஞரும் நடிகையுமான வைஜெயந்திமாலா பாலி மற்றும் மந்தைவெளி விசி கார்டன் பகுதியில் வசிக்கும் நாதஸ்வர மூத்த கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம்.

வைஜெயந்திமாலா பாலிக்கு பத்ம விபூஷன் விருதும், சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது.

சேஷம்பட்டி சிவலிங்கம்.
Verified by ExactMetrics