கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு அருகே பிரபலம் வாய்ந்த உடுப்பி ஸ்ரீ கணேச பவன் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் புதிய ஊரடங்கு உத்தரவால் இங்கு வேலை செய்து வந்த ஊழியர்களை நிறுத்திவிட்டு, ஒரு சில ஊழியர்களை கொண்டு பார்சல் சேவை மட்டுமே வழங்குகின்றனர். மேலும் இந்த பார்சல் சேவையால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் அமர்ந்து சாப்பிடவே விரும்புவார்கள், என்று உரிமையாளர் தெரிவிக்கிறார்.
அருகிலேயே ஒமேகா பேக்கரி என்ற கடை நடத்திவருபவர் கடந்த வருடம் எங்களுக்கு வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது என்றும் அதனால் குடும்ப தேவையை சமாளிக்க கூடுதலாக ஒரு வியாபாரம் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
இதேபோல் அருகில் உள்ள பல கடைகளில் நாம் விசாரித்த போது, இதே நிலை தொடர்ந்தால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வியாபாரம் செய்வோர் கூறுகின்றனர்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…