ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழாவின் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 22ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது. கொடியேற்றம் மார்ச் 19ம் தேதி நடைபெறவுள்ளது. பங்குனி பெருவிழாவின் தேதி வாரியான நிகழ்ச்சியின் முழு விவரங்கள் பிப்ரவரி 22ம் தேதி நடக்கும் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கடந்த வருடம் கொரோனா காரணமாக பங்குனி பெருவிழா தடைசெய்யப்பட்டது. இந்த வருட விழாவில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்ள அரசு அனுமதிக்கும் என்று கோவில் அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர். இதன் மூலம் இந்த வருடம் பங்குனி பெருவிழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…