3A மற்றும் 23B வழித்தடங்களில் MTC பேருந்துகளை மீண்டும் இயக்க மக்கள் வேண்டுகோள்.

மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின் தீவிர முயற்சியினால் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

மக்கள் தற்போது அதே போன்று ஏற்கெனெவே இயங்கி வந்த இரண்டு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ஒன்று 3A வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் பகுதியிலிருந்து பிராட்வே வரை டாக்டர் ரங்காரோடு, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, மவுண்ட்ரோடு வழியாக இயக்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழியாக பேருந்து சேவையே தற்போது இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மற்றொரு வழித்தடமான 23B (மயிலாப்பூரிலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை) பேருந்தையும் மக்கள் மீண்டும் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழித்தடமும் ஏற்கனெவே இயக்கப்பட்டு வந்த வழித்தடம்தான் என்று தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago