அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை மற்றும் கிளி போன்றவற்றில் ஏதாவதொன்றை வீட்டில் வளர்க்கலாம் என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்ப்பதற்கு போதிய இட வசதிகள் இல்லை, ஆனாலும் இந்த கருத்தை ஏற்ற அவரது குடும்பத்தார் ஏற்று கடைசியாக வட சென்னையிலிருந்து ஒரு கிளியை வளர்ப்பதற்காக வாங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த கிளி வீட்டில் வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை. எனவே அதை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் வேறொரு இடத்திலிருந்து இரு கிளிகளை வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். தற்போது அந்த இரு கிளிகளும் சாரதா வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் இந்த இரு கிளிகளும் தற்போது தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வருவதாக சாரதா குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
செய்தி மற்றும் புகைப்படம் : எஸ். பிரபு
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…