அடையாறு ஆற்றில் தவறி விழுந்தவரை மீட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள்

இன்று காலை அடையாறு போலீசாரும் மற்றும் மல்லிகைபூ நகர் மக்கள் சிலரும் இணைந்து ஆர்.ஏ.புரத்தில் உள்ள திரு.வி.க பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய ஒருவரை மீட்டனர். ஆற்றின் அருகே பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த நபர் தற்செயலாக ஆற்றில் தவறி விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக அந்த நபரை காப்பாற்ற உதவி கோரி மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஆற்று நீரில் போராடும் நபரைக் கண்டதும், ஒரு சிலர் ஆற்றில் நீந்தி அவரை கரைக்கு இழுத்து வந்தனர். அண்மையில் பெய்த மழையால், அடையாறு ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆற்றின் கரையில் நடந்து செல்லும் மக்கள் அதிலிருந்து விலகி எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Verified by ExactMetrics