இன்று காலை அடையாறு போலீசாரும் மற்றும் மல்லிகைபூ நகர் மக்கள் சிலரும் இணைந்து ஆர்.ஏ.புரத்தில் உள்ள திரு.வி.க பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய ஒருவரை மீட்டனர். ஆற்றின் அருகே பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த நபர் தற்செயலாக ஆற்றில் தவறி விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக அந்த நபரை காப்பாற்ற உதவி கோரி மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஆற்று நீரில் போராடும் நபரைக் கண்டதும், ஒரு சிலர் ஆற்றில் நீந்தி அவரை கரைக்கு இழுத்து வந்தனர். அண்மையில் பெய்த மழையால், அடையாறு ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆற்றின் கரையில் நடந்து செல்லும் மக்கள் அதிலிருந்து விலகி எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…