முதலில் வடிகால் மோசமாக இருக்கும் வீதிகள் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது, மழையளவு குறைந்தால் மட்டுமே மழைநீர் வெளியேறும். புகைப்படக் கலைஞர் மதன் குமார் இன்று காலை பாபநாசம் சிவன் சாலை மற்றும் கச்சேரி சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார். மந்தைவெளியில் உள்ள திருவேங்கடம் தெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் வெள்ளநீரிலேயே நடந்து செல்வதாகவும் சி.எஸ் பாஸ்கர் தெரிவித்தார். மற்ற இடங்களில், மழை இல்லாமல் இருந்த சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்தது. சாலையோரங்களில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள ராஜி முத்துகிருஷ்ணன், சில சந்தர்ப்பங்களில், மரங்கள் மின்சாரம் வழங்கும் கேபிள்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டது என்றும், பின்பு மரங்களை அகற்றிய பின்பே அந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். நிலையான மழையின் போது முறிந்து விழும் பெரும்பாலான மரங்கள், உள்ளூர் தட்பவெப்பநிலையில் சரியாக வளராத மரங்களும் மற்றும் புதிய நடைபாதைகள் அமைக்கப்படும்போது அல்லது சாலைகள் / வீதிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும்போது சிமெண்டால் மூடப்பட்ட மரங்களே. பிஸியான சாலைகள் மற்றும் தெருக்களில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கான அவசர அழைப்புகளுக்கு உள்ளூர் ஊழியர்கள் முன்னுரிமை கொடுத்து பதிலளிக்கின்றனர். மழையின் போது பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாவண்ணம் தடுப்பதற்காக சமீபத்திய நாட்களில் சில பகுதிகளில், சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றியது குறிப்பிடத்தக்கது. சூறாவளி காற்று மின் இணைப்புகள் மற்றும் கேபிள்களுக்கு சேதம் விளைவித்தால் மின்சாரம் அணைக்கப்படும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…