முதலில் வடிகால் மோசமாக இருக்கும் வீதிகள் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது, மழையளவு குறைந்தால் மட்டுமே மழைநீர் வெளியேறும். புகைப்படக் கலைஞர் மதன் குமார் இன்று காலை பாபநாசம் சிவன் சாலை மற்றும் கச்சேரி சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார். மந்தைவெளியில் உள்ள திருவேங்கடம் தெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் வெள்ளநீரிலேயே நடந்து செல்வதாகவும் சி.எஸ் பாஸ்கர் தெரிவித்தார். மற்ற இடங்களில், மழை இல்லாமல் இருந்த சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்தது. சாலையோரங்களில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள ராஜி முத்துகிருஷ்ணன், சில சந்தர்ப்பங்களில், மரங்கள் மின்சாரம் வழங்கும் கேபிள்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டது என்றும், பின்பு மரங்களை அகற்றிய பின்பே அந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். நிலையான மழையின் போது முறிந்து விழும் பெரும்பாலான மரங்கள், உள்ளூர் தட்பவெப்பநிலையில் சரியாக வளராத மரங்களும் மற்றும் புதிய நடைபாதைகள் அமைக்கப்படும்போது அல்லது சாலைகள் / வீதிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும்போது சிமெண்டால் மூடப்பட்ட மரங்களே. பிஸியான சாலைகள் மற்றும் தெருக்களில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கான அவசர அழைப்புகளுக்கு உள்ளூர் ஊழியர்கள் முன்னுரிமை கொடுத்து பதிலளிக்கின்றனர். மழையின் போது பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாவண்ணம் தடுப்பதற்காக சமீபத்திய நாட்களில் சில பகுதிகளில், சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றியது குறிப்பிடத்தக்கது. சூறாவளி காற்று மின் இணைப்புகள் மற்றும் கேபிள்களுக்கு சேதம் விளைவித்தால் மின்சாரம் அணைக்கப்படும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…