செய்திகள்

செவ்வாய்க்கிழமை மயிலாப்பூரில் பொழிந்த மழையின் தாக்கங்கள்?

முதலில் வடிகால் மோசமாக இருக்கும் வீதிகள் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது, மழையளவு குறைந்தால் மட்டுமே மழைநீர் வெளியேறும். புகைப்படக் கலைஞர் மதன் குமார் இன்று காலை பாபநாசம் சிவன் சாலை மற்றும் கச்சேரி சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தார். மந்தைவெளியில் உள்ள திருவேங்கடம் தெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் வெள்ளநீரிலேயே நடந்து செல்வதாகவும் சி.எஸ் பாஸ்கர் தெரிவித்தார். மற்ற இடங்களில், மழை இல்லாமல் இருந்த சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்தது. சாலையோரங்களில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள ராஜி முத்துகிருஷ்ணன், சில சந்தர்ப்பங்களில், மரங்கள் மின்சாரம் வழங்கும் கேபிள்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டது என்றும், பின்பு மரங்களை அகற்றிய பின்பே அந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். நிலையான மழையின் போது முறிந்து விழும் பெரும்பாலான மரங்கள், உள்ளூர் தட்பவெப்பநிலையில் சரியாக வளராத மரங்களும் மற்றும் புதிய நடைபாதைகள் அமைக்கப்படும்போது அல்லது சாலைகள் / வீதிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும்போது சிமெண்டால் மூடப்பட்ட மரங்களே. பிஸியான சாலைகள் மற்றும் தெருக்களில் விழுந்த மரங்களை அகற்றுவதற்கான அவசர அழைப்புகளுக்கு உள்ளூர் ஊழியர்கள் முன்னுரிமை கொடுத்து பதிலளிக்கின்றனர். மழையின் போது பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாவண்ணம் தடுப்பதற்காக சமீபத்திய நாட்களில் சில பகுதிகளில், சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றியது குறிப்பிடத்தக்கது. சூறாவளி காற்று மின் இணைப்புகள் மற்றும் கேபிள்களுக்கு சேதம் விளைவித்தால் மின்சாரம் அணைக்கப்படும்.

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

1 day ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

2 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

3 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

3 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

3 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

3 days ago