தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு போடும் திட்டம் தோல்வி.

எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த முறை முதல் முறையாக தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த செய்தி மற்றும் இதற்கான வழிமுறைகள் சரிவர மக்களுக்கு சென்று சேரவில்லை. இதனால் இந்த திட்டம் தோல்வியடைந்தது. மூத்த குடிமக்கள் சிலர் தபால் ஓட்டின் விண்ணப்பம் தபாலில் வரும் என்றும் விண்ணப்பத்தை தபாலிலேயே அனுப்பலாம் என்றும் நினைத்திருந்தனர். சிலர் மின்னஞ்சல் மூலமாக தபால் ஒட்டு போடவேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையமோ ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள எண்பது வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு சென்று தபால் ஓட்டின் 12D விண்ணப்பத்தை வழங்கினர்.

ஆனால் சில மூத்த குடிமக்கள் ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துவராததால் கொரோனா காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. 12D விண்ணப்பத்தை சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடா முடியும். ஆனால் அவ்வாறு 12D விண்ணப்பத்தை சமர்பித்தவர்களின் வீடுகளுக்கு பின்னர் ஊழியர்கள் வாக்கு பெட்டியை எடுத்துவந்து தபால் ஓட்டை சேகரிக்கவில்லை என்றும் ஒரு சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் மூத்த குடிமக்கள், நாளை மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நாளை வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதா வேண்டாமா என்ற மனநிலையில் உள்ளனர். இந்த கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் ஆர்.கே நகர் பகுதியில் உள்ள மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 months ago