ஆர். கே நகரில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீதிகளை அழகுபடுத்தும் பணிகளை சிறப்பாக செய்துவருகின்றனர்.

ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அவர்களுடைய தெருவில் மரங்களை நட்டும், சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்தும், இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டும் தெருவில் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

இது தவிர வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரித்து உள்ளூர் பூங்கா அருகே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் சேகரிக்கின்றனர். இதை ஏஜென்ட் ஒருவர் எடுத்துச்செல்கிறார். இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை உர்பேசர் ஊழியர்களிடம் நேரடியாக கொடுக்கின்றனர். ஆகவே இந்த தெருக்களில் குப்பைகளை பார்க்கமுடியாது. இப்போது இந்த ராமகிருஷ்ணா நகரில் பத்து தெருக்களில் வசிக்கும் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதல் மற்றும் இரண்டாவது தெருவிலும் மக்கள் தெருக்களில் மரம் நடுதல் மற்றும் இதர அழகுபடுத்தும் வேலைகளை செய்கின்றனர். இது மற்ற பகுதி மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago