ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அவர்களுடைய தெருவில் மரங்களை நட்டும், சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்தும், இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் மட்டும் தெருவில் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
இது தவிர வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேகரித்து உள்ளூர் பூங்கா அருகே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் சேகரிக்கின்றனர். இதை ஏஜென்ட் ஒருவர் எடுத்துச்செல்கிறார். இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை உர்பேசர் ஊழியர்களிடம் நேரடியாக கொடுக்கின்றனர். ஆகவே இந்த தெருக்களில் குப்பைகளை பார்க்கமுடியாது. இப்போது இந்த ராமகிருஷ்ணா நகரில் பத்து தெருக்களில் வசிக்கும் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதல் மற்றும் இரண்டாவது தெருவிலும் மக்கள் தெருக்களில் மரம் நடுதல் மற்றும் இதர அழகுபடுத்தும் வேலைகளை செய்கின்றனர். இது மற்ற பகுதி மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…