மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான பகுதிகளிலும் மூலைகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சி.பி. ராமசாமி சாலையில் மக்கள் தெருவிலேயே குப்பைகளை கொட்டுவதாக உர்பேசர் சுமித் நிறுவன ஊழியர் தெரிவிக்கிறார். பல முறை இதுபற்றி அறிவுறுத்தியும் கேட்பதில்லை என்று தெரிவிக்கிறார்.
அரசு விதிமுறையின் படி திரும்ப திரும்ப தெருவில் குப்பைகளை கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வழிமுறை உள்ளது. தற்போது உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை தெருவில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் உர்பேசர் ஊழியர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வருவதாகவும் அவரிகளிடம் குப்பைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…