தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. ஒன்று மந்தைவெளி தெருவிலும் (சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில) மற்றொன்று ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலை இ-சேவை மையத்திற்கு அருகிலும் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு இலவச சேவையாகும். இந்த மினி கிளினிக்கில் காய்ச்சல், தலைவலி, கை கால் வலி, சிறிய அளவிலான காயங்களுக்கு மருந்து போடுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் இங்குள்ள மருத்துவர் நோயாளிகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கிறார். தற்போதுவரை மயிலாப்பூரில் மூன்று கிளினிக்குகள் செயல்பட்டு வருகிறது.
சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மினி கிளினிக்குகள் திறந்திருக்கும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…