நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால், மதியம் 2 மணிக்கு, மயிலாப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது முறையாகத் தெரிந்தது.
121 வார்டுக்கு திமுகவின் மதிவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதலில் செய்தி வந்தது.
விரைவில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த தி.மு.க.வின் ஷீபா வாசு வார்டு 122-ல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மதியம் 2 மணி அளவில் வார்டு 123 க்கு சி.பி.ஐ-எம் வேட்பாளர் சரஸ்வதி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் அறிவிக்கப்பட்டது.
மாலை 4 மணியளவில் வார்டு 124, 125, 126 மற்றும் 171ல் ஆகிய வார்டுகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. (இந்த வார்டுகள் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்டது மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது)
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…