மந்தைவெளியில் உள்ள சாலைக்கு பிரபல பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டது.

மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்ட சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஆன்மிகப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான பாடல்களுக்கு பெயர் பெற்ற பிரபல பாடகரின் நினைவாக, தற்போது டி.எம். சௌந்தரராஜன் சாலை என்று இந்த சாலை அழைக்கப்படுகிறது.

மறைந்த பாடகரின் மகன் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து மரியாதை செலுத்தினார்.

மந்தைவெளியில், புதிய தெரு வழிகாட்டி பலகை அலங்கரிக்கப்பட்டு, அதைச் சுற்றி டிஎம்எஸ் குடும்பத்தினர் நின்றிருந்தனர். மேலும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மற்றும் உள்ளூர் வார்டு கவுன்சிலர் அமிர்த வர்ஷினியும் இருந்தனர்.

டி.எம்.எஸ்., என்று அன்புடன் அழைக்கப்படும் சௌந்தரராஜன் மார்ச் 24, 1923 இல் பிறந்தார், அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு சாலையின் பெயர், தற்போது டி.எம்.எஸ் பிறந்த நூற்றாண்டில் மாற்றப்பட்டுள்ளது. அவர் 2013 இல் காலமானார்.

அவரது குடும்பம் இந்த சாலையில் உள்ள நீல நிற பங்களாவில் வசிக்கிறது.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago