மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும், ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் சில வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். (இந்த பள்ளி ஏற்கனெவே மந்தைவெளியில் செயல்பட்டு வந்தது). மேலும் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை பள்ளியின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்று மந்தைவெளியில் உள்ள செயின்ட். ஜான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். இது போன்று மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை மயிலாப்பூர் டைம்ஸில் நாம் வெளியிடவுள்ளோம்.
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…