மயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை சாலையில் காண முடிந்தது. சிலர் பெற்றோர்களுடனும், சிலர் மிதிவண்டியில் தனியாகவும் வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
லேடி சிவசாமி அய்யர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனையும், முகக்கவசம் இல்லாமல் வந்திருந்த மாணவர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது. பின்பு மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைத்தனர். இன்று முதல் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவுள்ளது. இது போன்று ரபேல் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது, மேலும் சில விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் இந்த முடிவு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…