மயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை சாலையில் காண முடிந்தது. சிலர் பெற்றோர்களுடனும், சிலர் மிதிவண்டியில் தனியாகவும் வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
லேடி சிவசாமி அய்யர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனையும், முகக்கவசம் இல்லாமல் வந்திருந்த மாணவர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது. பின்பு மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைத்தனர். இன்று முதல் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவுள்ளது. இது போன்று ரபேல் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது, மேலும் சில விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் இந்த முடிவு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…