மயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை சாலையில் காண முடிந்தது. சிலர் பெற்றோர்களுடனும், சிலர் மிதிவண்டியில் தனியாகவும் வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
லேடி சிவசாமி அய்யர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனையும், முகக்கவசம் இல்லாமல் வந்திருந்த மாணவர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது. பின்பு மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைத்தனர். இன்று முதல் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவுள்ளது. இது போன்று ரபேல் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது, மேலும் சில விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் இந்த முடிவு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…