மூத்த குடிமக்களை குறிவைத்து வங்கி மோசடி தொலைபேசி அழைப்புகள்

ஒரு சில மயிலாப்பூர் மூத்த குடிமக்கள் சமீபத்திய காலங்களில், வங்கி அதிகாரிகள் என்று கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பாளர்கள் யாரிடமும் கொடுக்க கூடாத வங்கி கணக்கு விவரங்களை கேட்கிறார்கள் என்றும் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க அல்லது கிரெடிட் கார்டுகளை மேம்படுத்த இந்த தகவல்கள் தருமாறு கேட்பதாக தெரிவிக்கின்றனர். இந்த அழைப்பாளர்களில் சிலர் தாங்கள் மயிலாப்பூரில் உள்ள வங்கிகளின் அதிகாரிகள் என்று கூறுகின்றனர். இந்த அழைப்பாளர்கள் மூத்த குடிமக்களிடமிருந்து பெரிய அளவில் பணத்தை ஏமாற்றுவதற்காக தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்கள் என்பது தெளிவாகிறது. உங்களுக்கு உண்மையான வங்கி அதிகாரி என்று தெரிந்தாலும் கூட, எந்தவொரு தகவலையும் யாருக்கும் தொலைபேசியில் கொடுக்க வேண்டாம் என்று வங்கிகளும் காவல்துறையும் மக்களுக்குத் தெரிவிக்கின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து OTP எண்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களைக் எப்போதும் கேட்பதில்லை.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago