மூத்த குடிமக்களை குறிவைத்து வங்கி மோசடி தொலைபேசி அழைப்புகள்

ஒரு சில மயிலாப்பூர் மூத்த குடிமக்கள் சமீபத்திய காலங்களில், வங்கி அதிகாரிகள் என்று கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பாளர்கள் யாரிடமும் கொடுக்க கூடாத வங்கி கணக்கு விவரங்களை கேட்கிறார்கள் என்றும் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க அல்லது கிரெடிட் கார்டுகளை மேம்படுத்த இந்த தகவல்கள் தருமாறு கேட்பதாக தெரிவிக்கின்றனர். இந்த அழைப்பாளர்களில் சிலர் தாங்கள் மயிலாப்பூரில் உள்ள வங்கிகளின் அதிகாரிகள் என்று கூறுகின்றனர். இந்த அழைப்பாளர்கள் மூத்த குடிமக்களிடமிருந்து பெரிய அளவில் பணத்தை ஏமாற்றுவதற்காக தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்கள் என்பது தெளிவாகிறது. உங்களுக்கு உண்மையான வங்கி அதிகாரி என்று தெரிந்தாலும் கூட, எந்தவொரு தகவலையும் யாருக்கும் தொலைபேசியில் கொடுக்க வேண்டாம் என்று வங்கிகளும் காவல்துறையும் மக்களுக்குத் தெரிவிக்கின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து OTP எண்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களைக் எப்போதும் கேட்பதில்லை.

Verified by ExactMetrics