மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அமைதியான சாலைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

விடியற்காலையில் இருந்து, செய்தித்தாள்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள் அல்லது அரசு அனுமதித்த பணியில் இருப்பவர்கள் தவிர வாகனங்கள் எதுவும் சாலைகளில் செல்லவில்லை.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரவுகளைப் போலல்லாமல், மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் இன்று காலை எந்த போலீஸ் அவுட்போஸ்ட்களும் காணப்படவில்லை.

வியாபாரிகள் கூட தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதால், தெற்கு மாட வீதி, மந்தைவெளி தெரு போன்ற இடங்கள், பேய் மண்டலம் போல் இருந்தது. டி.டி.கே சாலை, டாக்டர். ஆர்.கே. சாலை மற்றும் ஆர்.கே. மட சாலைகளும் அமைதியாக காணப்பட்டது.

தனிநபர்கள் உள்ளூர் கோயில்களின் வாயில்கள் வரை நடந்து சென்று, பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து நகரந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள், சிறப்பு திருப்பலி என்று பிஸியாக இருக்கும் தேவாலய பகுதிகளில், சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் அமைதியாக இருந்தது, சில தேவாலயங்களில் சேவைகள் அனைத்தும் வெப்காஸ்ட் செய்யப்பட்டு விசுவாசிகள் வீட்டிலேயே இருக்க தேவாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

admin

Recent Posts

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 months ago