மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அமைதியான சாலைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

விடியற்காலையில் இருந்து, செய்தித்தாள்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள் அல்லது அரசு அனுமதித்த பணியில் இருப்பவர்கள் தவிர வாகனங்கள் எதுவும் சாலைகளில் செல்லவில்லை.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரவுகளைப் போலல்லாமல், மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் இன்று காலை எந்த போலீஸ் அவுட்போஸ்ட்களும் காணப்படவில்லை.

வியாபாரிகள் கூட தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதால், தெற்கு மாட வீதி, மந்தைவெளி தெரு போன்ற இடங்கள், பேய் மண்டலம் போல் இருந்தது. டி.டி.கே சாலை, டாக்டர். ஆர்.கே. சாலை மற்றும் ஆர்.கே. மட சாலைகளும் அமைதியாக காணப்பட்டது.

தனிநபர்கள் உள்ளூர் கோயில்களின் வாயில்கள் வரை நடந்து சென்று, பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து நகரந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள், சிறப்பு திருப்பலி என்று பிஸியாக இருக்கும் தேவாலய பகுதிகளில், சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் அமைதியாக இருந்தது, சில தேவாலயங்களில் சேவைகள் அனைத்தும் வெப்காஸ்ட் செய்யப்பட்டு விசுவாசிகள் வீட்டிலேயே இருக்க தேவாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 week ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 week ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

2 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

2 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

2 weeks ago