ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
விடியற்காலையில் இருந்து, செய்தித்தாள்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள் அல்லது அரசு அனுமதித்த பணியில் இருப்பவர்கள் தவிர வாகனங்கள் எதுவும் சாலைகளில் செல்லவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரவுகளைப் போலல்லாமல், மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் இன்று காலை எந்த போலீஸ் அவுட்போஸ்ட்களும் காணப்படவில்லை.
வியாபாரிகள் கூட தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதால், தெற்கு மாட வீதி, மந்தைவெளி தெரு போன்ற இடங்கள், பேய் மண்டலம் போல் இருந்தது. டி.டி.கே சாலை, டாக்டர். ஆர்.கே. சாலை மற்றும் ஆர்.கே. மட சாலைகளும் அமைதியாக காணப்பட்டது.
தனிநபர்கள் உள்ளூர் கோயில்களின் வாயில்கள் வரை நடந்து சென்று, பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து நகரந்தனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள், சிறப்பு திருப்பலி என்று பிஸியாக இருக்கும் தேவாலய பகுதிகளில், சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் அமைதியாக இருந்தது, சில தேவாலயங்களில் சேவைகள் அனைத்தும் வெப்காஸ்ட் செய்யப்பட்டு விசுவாசிகள் வீட்டிலேயே இருக்க தேவாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…