குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நடத்திய சர்வேயின்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

மயிலாப்பூர் டைம்ஸ் சார்பாக சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களிடையே சிறிய சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே சுமார் முப்பத்திரண்டு நபர்களிடம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் ஆறு நபர்கள் ஆண்கள் மீதிபேர் பெண்கள். இந்த சர்வேயின் படி மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு அவர்கள் பின்வரும் காரணங்களை பட்டியலிடுகின்றனர்.

* நோயினால் நான் பாதிக்கப்படவில்லை அதனால் எனக்கு தடுப்பூசி தேவையில்லை.
* ஏற்கனெவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டேன் அதனால் எனக்கு தேவையில்லை. மீண்டும் கொரோனா வந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்.
* இந்த பகுதியில் வீசும் கடல் காற்று என்னுடைய உடலுக்கு ஏற்றவாறு உள்ளது. நான் ஆரோக்கியமாக உள்ளேன்.
* இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.

மேலும் இங்கு வசிக்கும் மக்கள் பொதுவாக சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனெவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதனால் எனக்கு இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. மேலும் இங்கு வசிக்கும் மக்களுக்கு எங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்பது பற்றிய தகவல் கூட சரிவர தெரியவில்லை. சிலர் ஆர்.ஏ. புரம், மந்தைவெளி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் இருப்பிடம் அருகே உள்ள அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் பற்றி தெரியவில்லை. எனவே சென்னை மாநகராட்சி இது போன்ற பகுதிகளில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் தகவலை தெரிவிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 week ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 week ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

4 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago