பங்குனி பெருவிழா 2021: தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழாவில் பங்கேற்க வரும் மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகள்

பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பின்பு கோவில் வாயில் அருகே வைத்திருக்கும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

அறுபத்து மூவர் விழா அன்று எப்பொழுதும் நடைபெறும் தெருக்களில் பிரசாதங்கள் வழங்குவது, அன்னதானம் போடுவது, போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தேர் திருவிழா, அறுபத்திமூவர் விழா சுவாமி ஊர்வலம் எப்பொழுதும் போல நடைபெறும். ஆனால் அர்ச்சனைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படாது. சுவாமி வழிகளில் எப்பொழுதும் போல நிற்காது. தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலை போக்குவரத்து வழக்கம் போல சில மணி நேரம் நிறுத்தப்படும்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago