பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பின்பு கோவில் வாயில் அருகே வைத்திருக்கும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
அறுபத்து மூவர் விழா அன்று எப்பொழுதும் நடைபெறும் தெருக்களில் பிரசாதங்கள் வழங்குவது, அன்னதானம் போடுவது, போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தேர் திருவிழா, அறுபத்திமூவர் விழா சுவாமி ஊர்வலம் எப்பொழுதும் போல நடைபெறும். ஆனால் அர்ச்சனைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படாது. சுவாமி வழிகளில் எப்பொழுதும் போல நிற்காது. தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலை போக்குவரத்து வழக்கம் போல சில மணி நேரம் நிறுத்தப்படும்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…