ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவிடம் தேவாலய நிர்வாகிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இருநூறு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், மக்கள் அதிகளவு வரிசையில் வந்து இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இங்குள்ள பாதிரியார் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவை தொடர்பு கொள்ளலாம். எம்.எல்.ஏ மாநகராட்சி மூலம் இந்த முகாமை நடத்த ஏற்பாடு செய்து கொடுப்பார்.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…