ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மேற்குப் பகுதியில் இருந்த பாதணிகளை சேமிக்கும் ஸ்டாண்ட் அகற்றம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குத் தொடர்ந்து வரும் மக்கள், கோயிலின் மேற்குப் பகுதியில் உள்ள பாதணிகள் பாதுகாப்பு அறை அகற்றப்பட்டதால், பாதணிகளை வீதியில் விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்ட்டுள்ளதாகவும், சிலர் தங்களின் பாதணிகள்/திருடப்பட்டதைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

கோவிலுக்குச் செல்ல விரும்பும் முதியவர்களை ஆர்.கே.மட ரோடு முனைக்கும் மேற்கு கோபுரம் முனைக்கும் இடையில் ஏற்றி இறக்கிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் வண்டிகளுக்கு இடமளிக்க காலணி ஸ்டாண்ட் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், கோவில் வாசலின் மேற்குப் பக்கம், இலவச பாதணிகள் பாதுகாப்பு அறையில், பாதணிகளை சேமித்து வைக்காமல், பலர், பாதணிகளை வீதியில் விட்டு விட்டு செல்வதால், அடிக்கடி குளறுபடியாக காட்சியளிக்கிறது.

மக்கள் தங்கள் பாதணிகளை கோவில் வாசலுக்கு அருகில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று இங்கு ஒரு வழிகாட்டி பலகை இருந்தபோதிலும். மக்கள் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை.

Verified by ExactMetrics