மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த திட்டதை பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், அரசு இது போன்ற பழமையான கட்டிடங்களையும் புராதன சின்னங்களையும் இடிப்பதற்கு முன் பல தரப்பட்ட மக்களின் ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்றும், திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே தற்போது இது சம்பந்தமாக மக்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…