மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த திட்டதை பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், அரசு இது போன்ற பழமையான கட்டிடங்களையும் புராதன சின்னங்களையும் இடிப்பதற்கு முன் பல தரப்பட்ட மக்களின் ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்றும், திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே தற்போது இது சம்பந்தமாக மக்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…