மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த திட்டதை பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், அரசு இது போன்ற பழமையான கட்டிடங்களையும் புராதன சின்னங்களையும் இடிப்பதற்கு முன் பல தரப்பட்ட மக்களின் ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்றும், திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே தற்போது இது சம்பந்தமாக மக்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…