செய்திகள்

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பாரம்பரிய இடங்களில் மறு வளர்ச்சி திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த முடிவு.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த திட்டதை பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், அரசு இது போன்ற பழமையான கட்டிடங்களையும் புராதன சின்னங்களையும் இடிப்பதற்கு முன் பல தரப்பட்ட மக்களின் ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்றும், திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே தற்போது இது சம்பந்தமாக மக்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

13 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago