ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், புதிய சக்கர நாற்காலிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த ஆண்டு ஜூன் மாதம், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஒரு மூலையில் கிடக்கும் பழைய சக்கர நாற்காலிகளைப் பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டது.

இந்த செய்தியைத் தொடர்ந்து, இரண்டு பழையதை மாற்றி, மூன்று புதியவைகளை பயன்பாட்டில் கொண்டு வர கோயில் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக, ஏராளமான பக்தர்கள் கோவிலில் புதிய சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது. கோவில் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு பகுதியில் அவற்றைக் காணலாம்.

செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு

Verified by ExactMetrics