ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார்.

புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படும். நவராத்ரியின் முதல் நாளும், கடைசி நாளும் கற்பகாம்பாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தற்போதுள்ள விதிமுறைகளின் படி கோவிலுக்குள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஆனால் செவ்வாய்க்கிழமை மக்களை சன்னதிக்குள் அனுமதிக்கும் நடைமுறை வழக்கம் போல் தொடரும் என்று கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 hour ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago